மன்னிப்பு
மனிதர்களின் குணங்களில் மன்னித்து விடுவது என்பது மிகச்சிறந்த ஒன்று
மன்னித்து விடுபவர்களின் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்
மன்னிப்பவர்கள் எப்போதும் தவறு செய்பவர்களின்
சூழ்நிலையிலிருந்து யோசிப்பார்கள்
தவறுகளில் இருந்து மீண்டு வந்து இன்று சரியான வாழ்க்கை வாழ்கிற பலர்
சிலரால் மன்னிக்கப்பட்டவர்கள்
மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்
தவறை திரும்ப செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் மன்னிப்பை வழங்குகிறார்கள்
திரும்பத் திரும்ப அதே தவறை செய்பவர்கள் திருந்த மாட்டார்கள்
ஏனென்றால் அவர்களுக்கு திரும்பத்திரும்ப வழங்கப்பட்ட மன்னிப்பு பழகி விட்டது
மன்னிப்புக்கு ஒரு அளவு உண்டு
ஒரே தவறுக்கு திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டிருந்தால்
திரும்பத் திரும்ப அதே தவறை செய்வதற்கு மன்னிப்பதே தூண்டிவிடும்

Weldon
ReplyDelete